Looking For Anything Specific?

SABAA- 1

நான் sabaa ,

BE முடித்து விட்டு சென்னையில் வேலை தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் எங்கள் தூரத்து உறவினர் ஒருவரை எங்களின் குடும்ப நிகழ்வில் சந்தித்தோம். அவர் கர்நாடகா வில் IT company யில் நல்ல வேலையில் இருக்கிறார். அவரும், அவரது மனைவியும் கர்நாடகா விலேயே தங்கி வாழ்கின்றனர். ஏதாவது விசேஷங்களுக்கு மட்டும் எங்கள் ஊருக்கு வருவார்கள். அப்படி வந்த போதுதான் அந்த நிகழ்வு நடந்தது. அவர் பெயர் Ramkumar. மகன் என்ன செய்யறான் என்று என் அம்மாவிடம் ram விசாரித்தார். என் அம்மா , படிப்புக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்கவில்லை. அதனால் ஏதோ ஒரு சிறிய company யில் வேலைக்கு போறான். என்று அலுத்துக்கொண்டார். அவரோ, பெங்களூரில் நிறைய வேலை வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றும், மகனை எங்களோடு அனுப்புங்கள் நல்ல வேலையில் அமர்த்துகிறேன் என்றும் கூறினார்.

என் அம்மா விற்கு ரொம்ப சந்தோஷம். நமது மகனும் வெளியூர் போய் நன்றாக சம்பாதித்து வருவான் என்று, ram விடம் என் மகனை உங்களோடு அனுப்புகிறேன் ஒரு நல்ல வேலை வாங்கி தாங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

தாராளமாக ஏற்பாடு செய்கிறோம் என்று, அவரும் அவரது மனைவியும் ஒப்புக்கொண்டு என்னை அவர்களுடன் அழைத்து சென்றனர்.

எனது படிப்புக்கான அனைத்து certificate களும் மற்றும் எனது துணிமணிகளை எடுத்துக்கொண்டு என் பெற்றோருடன் விடைபெற்று இரயிலில் கிளம்பினோம்.

அதுவரை சரியாக கூட பேசிடாத ஒருவரை நம்பி அவர்களுடன் நான் சென்றேன். வேலைக்காக, இரயிலின் பயணத்தின் போது தான் அவர்களுடன் பேசி பழகினேன். Ramkumar ன் மனைவி பெயர் கஸ்தூரி அவர்களும் மிக கனிவான என்னுடன் பேசினார். அவர்களுடன் பழகியத்தில் மிக ஆனந்தமாக இருந்தது.

தொடரும்

Post a Comment

0 Comments